Sunday, October 12, 2008

இந்திய பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரமும்.

.


இந்திய பொருளாதாரமும் அமெரிக்க பொருளாதாரமும் .


.


அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்தது இந்திய பொருளாதாரம், கேட்கவே சிரிப்பாக வருகிறதல்லவா?

அமெரிக்க பொருளாதாரத்திற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க தொன்றுகிறதல்லவா?


இருக்கிறது,


அரசாங்கமே அதை பற்றி யோசிக்காத நிலையில் நாம் நினைத்து என்ன பயன் என்கிறீர்களா?

சரி உங்கள் கேள்விகளை விட்டு விட்டு வாருங்கள்.
நமது இந்திய அரசாங்கம் தொழில்நுட்ப துறையில் நாம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளோம் என்று பீற்றி கொள்கிறதல்லவா? (இது பீற்றி கொள்ள மட்டுமே) ஆனால் அது நம் பொருளாத வளர்ச்சிக்கு ஒரு வேலையும் செய்யவில்லை.

நம் இந்திய நாடு ஒரு விவசாய நாடு, ஆனால் தற்போதைய நிலையில் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளோம், (மியன்மார் நாட்டில் இருந்து பருப்பு இறக்குமதி ) காரணம், விவசாயத்திற்காக இந்திய விவசாய நாடும் எதுவும் செய்யவில்லை 80%மக்களை மறந்துவிட்டது (விவசாய துறை மட்டுமல்ல கட்டுமான துறையும் தான்)

விவசாயிகளுக்கும் விவசாயத்தின் மீது பிடிப்பு குறைந்து விட்டது, ஏனென்றால் உழபிர்கேற்ற வருமானம் இல்லை ( A/C காற்றில் இருக்கும் நமகெப்படி தெரியும்) காரணம் இடை தரகர்களில் ஆதிக்கம் தான். அப்புறம் எவன் சார் வருமானம் இல்லாம உழைப்பான்


( 30% ஹைக் கொடுகரானு நாம் வேற கம்பெனிக்கு போறோம்) விவசாயிக்கு ஹைக் கொடுக்க யாரும் இல்ல, இருகர கோமணத்தை கூட பிடுங்காத குறைதான். A/C ல இருக்கும் நமக்கு வாழ்கை தரம் அதிகமாகிகொண்டே போகுது, சேற்றில் இருக்கும் விவசாயின் வாழ்கை தரம் குரஞ்சிகிட்டே போகுது.

"அவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்" என்பதை அரசாங்கம் (நாமும் தான்) மறந்துவிட்டது.

இதற்கான விடிவு எப்பொழுது?

இந்த விடிவில் தான் நம்ம பொருளாதாரம் அமெரிக்கா பொருளாதரத்தை சார்ந்திருக்காமல் இருக்கு௦


பின் குறிப்பு :

விவசாயத்திற்கு இந்திய அரசாங்கம் நிறைய வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது ஆனால் அது பணகார விவசாயிகளுக்கு மட்டும் தான், ஏழை விவசாயிக்கு இல்லை, ( ஓர் எடுத்துகாட்டு ஏற்கனவே டிராக்டர் வைத்திருக்கும் விவசாயிக்கு இரண்டாவதாக டிராக்டர் வாங்க கடன் வழங்கப்பட்டது பிறகு அந்த கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது, மகிவுந்து வைத்திருக்கு ஏழை விசயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது) - இன்னும் நிறைய இருக்கு இப்போதைக்கு இது போதும்.
திட்டம் போடுவது பெரிசல்ல யாருக்கு பயன் கிடைக்கிறது என்பதும், திட்டத்தின் நோக்கத்தையும் ஆராய்து செய்யவேண்டும்.



(எழுத்துப் பிழை இருப்பின் மண்ணிக்கவும்)

.




4 comments:

Anonymous said...

நல்ல பதிவு.

ஊர்க்குருவி said...

மோகன் உங்களின் ஆக்கங்களை நான் மென்மேலும் எதிர் பார்க்கிறேன்.................

Mohan said...

உங்கள் கருத்திற்கு நன்றி, என்னால் முயன்ற அளவிற்கு இது போன்ற நல்ல கருத்துக்களை பதிய முனைகிறேன்,

Unknown said...

unga karuthu neyamanathya, eaan karuthum athuthan.