Friday, October 24, 2008

துண்பத்தை மறந்த தீபாவளி ! ! !

தீபாவளி கொண்டாட்டமும் தமிழனின் உயிர் போராட்டமும்.


மிழகத்தில் உள்ள தமிழர்கள் இனிப்பு பலகாரங்கள் மற்றும் பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாட போகிறோம், அதற்கும் முன் நம் தமிழினம் உயிர் போராட்டங்களுடன் தீபாவளியை கொண்ட்டாடவிருகிறது. அது யாரும் அல்ல நாம் ஈழ தமிழர்கள். ஆரிய கலாச்சாரமான தீபாவளியை கொண்டாடுகிறோம், நம் தமிழின மக்களை மறந்து. நம்மக்கு இனிப்புகளுடன் தீபாவளி கொண்ட்டாட்டம் தேவையா?


நமது குடும்பத்தில் ஒருவர்க்கு உடல் நிலை சரி என்றால் கூட நாம் தீபாவளியை கொண்டாடுவோமா?

ஒருபக்கம் தமிழன் துன்புறும் பொழுது மறுபுறம் நமக்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டங்கள் தேவையா?

அரசியல் வாதிகளை பார்த்து பார்த்து நாமும் அவர்கள் போலவே ஆகிவிட்டோம், (தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து ஈழத்து செய்திகளை பார்த்து கண்ணீர் விடுவது பிறகு, அடுத்த நிமிடமே ஈழத்தமிழர்களின் துயரங்களை மறந்துவிடுவது)


நமது வீட்டில் ஒருவர் இறந்தால் நாம் தீபாவளி கொண்டாடுவோமா?
ஈழத்தில் சாவது எவனோ ஒருவன் தானே, அது அவனவன் தலை எழுத்து. அதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்ற எண்ணம். நாம் தீபாவளிய கொண்டாடுவோம். மானம் கெட்ட மக்களாய் (மாக்களாய்) இருக்கிறோம்,

அரசியல் ஆதாயங்களுக்காக நமது தங்க தாரகை, ஜெயலலிதா, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார், முதல் முறையாக,

மத்திய ஆட்சி முடியும் நேரத்தில் பதவியை விட்டு விலகுவோம் என்று தமிழக ஆளும் கட்சி முடிவு

ஈழத்தில் தமிழனுக்கு உரிமை கிடைக்காமல் இனி பிறந்தநாளே கொண்டாட போவதில்லை என்று அறிக்கை விட்டு, பிறகு அதனை மறந்து பிறந்த நாள் (சென்ற ஆண்டு) கொண்டாடிய விசய காந்து,

தமிழன் என்ற உணர்வையே மறந்து தமிழனுக்காக எதிர்ப்பு குரல் கொடுக்கும் காங்கிரசு

நினைவுக்கு வரும் போது மட்டுமே ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மாற்ற அரசியல் வாதிகளை போல நாமும் மாறி விட்டோம்.

நம்மில் ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை அனைவரும் அசைத்து பார்கிறார்கள்.

வாழ்வது யாராயினும் வீழ்வது தமிழனே. (தமிழன் மட்டுமே)




நன்றி தமிழர்களே.


மேலும் சில துக்கங்கள் இங்கே

***



No comments: