Friday, October 17, 2008

மழையும் மனிதர்களும்.

மழைக்கும் நல்ல மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு

வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று நினைகரீங்களா? இதே கேள்வி தான் எனக்குள்ளும் எழுந்தது, இந்த மாதரியான வார்த்தையை கேட்டு நானும் ஆடிபோனேன்,

சரி விசயத்திற்கு வருவோம், எங்கள் கிராமம் கொல்லி மலை சாரலில் அமைந்துள்ள ஒரு அழகான மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமம். (மூட நம்பிக்கைகள் எந்த அளவுக்கு இருக்குனு நீங்களே படிக்க படிக்க தெரிஞ்சிக்குவீங்க.)

எங்க ஊர் முதியவர் ஒருவரிடம் நான் விவசாயத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன், இப்பொழுதெல்லாம் மழை பெய்வதில்லை, அதனால் விவசாயமும் ஒழுங்கா பண்ண முடியலனு சொன்னார், பதிலுக்கு நானும் ஆமாம் மரங்களை நிறைய வெட்டுறாங்க, கொல்லிமலைல பாருங்க பாறைகள் தான் தெரியுது, மரங்களே குறைவா தான் இருக்குனு சொன்னேன், அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை நோகடித்து,

மரம் வெட்டுரதெல்லாம் காரணம் இல்லை, இப்போவெல்லாம் நல்ல மனுசங்களே இல்ல, அதனால தான் மழை பெயுரதில்லை. நல்ல மனுசங்க இருந்தா மாதம் மும்மாரி பெயும்னார். நானும் பதிலுக்கு அப்படிலாம் இல்லைங்க காடுகள் அழிய அழிய மழை வளம் குறையும், மனுசங்களுக்கும் மலைக்கும் சம்பந்த படுத்த கூடாதுன்னு சொன்னேன். அதற்கு அவர், படிச்சவங்களுக்கு அறிவு கம்மின்னு சொல்றது சரி தான். மரம் இருந்த மழை எப்படி பெயும்னார், நாட்டு நடப்பை சொன்னா உனக்கு புரியாதுன்னு முறைத்தார்.( இதுக்கும் மேல விளக்கம் கொடுத்திருந்த எனக்கு அடி கூட விழுந்திருக்கும்)

அப்புறம் தான் நான் அவர் சொன்னதுக்கான வார்த்தைகளை ஆராய்ந்தேன்.

நல்ல மனிதர்கள் இருந்தால் மரங்களை வெட்ட மாட்டார்கள், மரங்களயும் ஒரு உயிராக நினைத்து அழிக்க மாட்டர்கள். so நல்ல மனிதர்களுக்கும் மழைக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருக்கிறதாகவே எனக்கும் தோன்றுகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அவர் கூற்றில் மூட நம்பிக்கை இருக்கிறதா? இல்லை உண்மை இருக்கிறதா?

(ஒருபக்கம் நாட்டை அயல் நட்டுகாரனுக்கு வித்துகிட்டு இருகோம், மறுபக்கம் மூட நம்பிக்கைல விழுந்துகிட்டு இருக்கோம் - 2020 வல்லரசாகுமா இந்தியா )


*********


GLLs -Web Designing
GLLs - SEO Services

No comments: